பற்றிப் பிடித்துப் படித்த படிப்பு படிக்காதன காட்டும்
கற்கக் கேட்கக் கற்ற கல்வி கல்லாதனது உணர்த்தும் !
படிப்பு கல்வி அல்ல! கல்வி படிப்பும் அல்ல !
ஆற்றின் ஓட்டத்தில்
பாறை தடுக்க
எழும்பிக் குதிக்கும் அலைபோல் -
வாழ்வின் ஓட்டத்தில்
வராதன எதிர்நிற்கும்
குனிந்து நிமிறும் களைகள்!
கற்பன ஓர்நாள் அற்றுப்போம் !
அற்றுப் போகவா கற்பது ?
அற்றுப் போகாப் பொருள் கற்க
ஈறற்ற ஒன்றல்லவா கற்க வேண்டும் ?
கற்றல் என்பது நிற்றல் அல்லவா?
கற்றவாறு நிற்றல் அல்லவா ?
கற்று - அற்றுப் போதல் கற்றல் !
கற்று - அற்றுப் போதல் கற்றல்
நின்று - அற்றுப் போதல் நிற்றல்
கற்பனை நின்றால் நிற்றலே ஆகும்! அது கற்றன எல்லாம்
அற்றுப் போதலே !
எனக்கு எதுவோ உனக்கும் அதுவே...
பால் நிலாப் பாதை
இளையராஜாவின் இரண்டு நூல்களும் வெளியீடு
குமுதம் பு ( து )த்தகம்.
தொடர்புக்கு: 044 26426124
PUDUTHAGAM@KUMUDAM.COM
04-07-2012 குமுதத்திலிருந்து எடுத்தாளப்பட்ட கவிதை !
நன்றியுடன்!
0 comments:
Post a Comment
Kindly post a comment.