பாசன பொறியியல் வல்லுநரான முனைவர் பழ. கோமதிநாயகம் எழுதிய 'தாமிரவருணி - சமூகப் பொருளியல் மாற்றங்கள்' என்னும் நூலின் வெளியீட்டு விழாவும் அவரது நினைவு விழாவும் 29-12-11 அன்று வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது.
| இவ்விழாவிற்கு என்.சி.பி.எச். தலைவரும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான ஆர். நல்லக்கண்ணு தலைமை தாங்கினார். நூலை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட தமிழக பசுமை இயக்கத் தலைவர் மரு.வி. ஜீவானந்தம் பெற்றுக்கொண்டார். நூலைப் பற்றிய கருத்துரையை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் ஆற்றினார்.
முனைவர் பழ. கோமதிநாயகம் நினைவு சொற்பொழிவுக்காக அவர் பேரால் அமைந்த அறக்கட்டளையிலிருந்து ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை அவரது இளைய மகன் வெற்றிவேல் அவர்கள் ஆர். நல்லகண்ணு அவர்களிடம் அளித்தார். இவ்வாண்டு மதுரைத் திருவள்ளுவர் கழகம் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் சார்பில் வழக்கறிஞர் செளந்திரபாண்டியன் இந்தக் காசோலையை பெற்றுக்கொண்டார்.
முனைவர் பழ. கோமதிநாயகம் அறக்கட்டளையும், பாவை பதிப்பகமும் இணைந்து நடத்திய இந்த விழாவில் எம்.பாண்டியராசன் வரவேற்புரை நிகழ்த்தினார். தி. இரத்தினசபாபதி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
|
0 comments:
Post a Comment
Kindly post a comment.