கனவுகளொடு
வந்திறங்குகிறார்கள்
கோடம்பாக்கத்துக்கு
கம்பெனி
படியேறி படியேறி
செருப்பு தேய்ந்து போச்சி
வாய்ப்புக்காக
அவமானங்க்களையும்
புறகணிப்புக்களையும்
ஏத்துக்க வேண்டியதாச்சி
இழுத்தடித்த போதுதான
சினிமான்னா என்னன்னு
புரியலாச்சுசி
கற்பனைகள்
வறண்டு போச்சி
பசி மயக்கத்தில்
கண்கள் இருட்டாச்சி
வெறுங்க்கையா
திரும்பிப்போனா
ஊரு சனம் கிண்டல் பண்னும்
கனவுலகக் கனவுகளை
மூட்டை கட்டி வைத்து விட்டு
டீ கிளாஸ் கழுவி
வயித்த நிரப்பலாச்சி
சினிமா கம்பெனி முகவரியை
விசாரித்து வருபவர்கள்
எண்ணிக்கை
நாளுக்கு நாள்
கூடிக்கிட்டே போச்சி
இப்போது திரையரங்க்குக்குச் சென்று
படம் பார்ப்பதைக் கூட
நிறுத்தியாச்சி
பரிசு
என்றைக்கும்
எனக்கு விடுமுறைதான்
மேலதிகாரியின்
நச்சரிப்புக்களையோ
கிண்டல் பேச்சூக்களையோ
இனி கேட்க வேண்டியதில்லை
அலாரம் வைத்து
எழுந்திருப்பதிலும்
அவசரமாக
குளிப்பதிலிருந்தும்
பேருந்து கூட்ட நெரிசலில்
சிக்கித் தவிப்பதிலிருந்தும்
இனி விடுதலை
பயணத்தின் போது
அவசரப்பட வேண்டியதில்லை
பணிக்குத் திரும்பவேண்டுமேயேன
வேலைப் பளுவால்
வீட்டில் உள்ளவர்கள் மேல்
எரிந்து விழும் சந்தர்ப்பம்
இனி நேராது
கோப்புக்ள் அடுக்கப்பட்ட
மேஜையை
இனி நினைத்துப் பார்க்க
முடியாது
பதவி உயர்வுக்காக
இனி ஏங்கித் தவிக்க வேண்டியதில்லை.
கவர்ன்மெண்ட் மாறினாலும்
கவலைப்படத் தேவையில்லை
டிரான்ஸ்பர் செய்து விடுவேன்
ஏன் யாரும் மிரட்டப் போவதில்லை
ஒற்றை வரியில் சொன்னால்
நான் பணிஓய்வு பெறுகிறேன்.
தாமரை இலக்கிய இதழில், ப்.மதியழகன் எழுதியது.
நவம்பர் 2011ல் வெளியானது.
0444247470996.
0 comments:
Post a Comment
Kindly post a comment.