இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள் 42 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 22ம் தேதி நாகப்பட்டினத்தை அடுத்த அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 42 மீனவர்கள் 6 படகுகளில் கடலு்ககு மீன்பிடிக்கச் சென்றனர்.
23ம் தேதி இரவு அவர்கள் கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் இலங்கை கடற்படை அங்கு வந்தது. உடனே 42 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களை திரிகோணமலைக்கு கொண்டு சென்று சிறை வைத்தனர்.
அவர்களை மீட்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்ததையடுத்து கைதான மறுநாளே 42 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.