Tuesday, November 22, 2011

புதுடெல்லியில் ``தமிழ்நாடு நாள்'' திருவிழா கொண்டாட்டம்



புதுடெல்லியில் பிரகதி மைதானத்தில் நடைபெற்ற வர்த்தகப் பொருட்காட்சியில் தமிழக அரசின் சார்பாக பல்வேறு துறைகளின் நேரடி செயல் விளக்கம் நடைபெற்றது.

பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியில் நேற்று முன்தினம் (நவ.20) தமிழ்நாடு நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி அ.அசோகன் தலைமையேற்று குத்துவிளக்கேற்றி பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தார். புதுடெல்லி தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையர் ஜஸ்பீர் சிங் பஜாஜ், மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் பொ.சங்கர் ஆகியோர் முன்னிலை விகித்தார்கள்.

முன்னதாக பன்னாட்டு வர்த்தக மேம்பாட்டு கழகத்தின் அலுவலர்கள் உரிய வரவேற்பளித்துக் கெளரவித்தார்கள். அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் இடம்பெற்றுள்ள பல்வேறு துறை மற்றும் நிறுவனங்களின் அரசு திட்டங்கள் மற்றும் கைவினைப் பொருட்களின் நேரடி செயல் விளக்கத்தினை பார்வையிட்டார்கள்.

இவ்வாறு தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.