Sunday, October 9, 2011

சவூதியில் 8 பேருக்கு தலை துண்டித்து கொடூர தண்டனை

http://www.thaalamnews.com

எகிப்து நாட்டு செக்யூரிட்டி கார்டு ஒருவரை கொ‌ன்றதாக , 8 வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சவூதி அரேபியாவில் தலையைத் துண்டித்துக் கொடூர தண்டனை விதிக்கப்பட்டது.

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அரசுக்குச் சொந்தமான தானியச் சேமிப்புக் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கின் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றிய எகிப்து நாட்டைச் சேர்ந்த ஹூசைன் சையீத் முகமது அப்துல்காலித் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்க முயன்றவர்களைத் தடுத்த போது இவர் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக வங்கதேச நா‌ட்டைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்கு, கோர்டில் உறுதி செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது .

இதைத்தொடர்ந்து குற்றவாளிகளான வங்கதேச நாட்டைச் சேர்ந்த எட்டு பேருக்கும், கடந்த வெள்ளியன்று அந்நாட்டு சட்டத்தினைபடி தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைவிதிக்கப்பட்டது. மேலும் மூவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2010-ம் ஆண்டு துவங்கி இதுவரை 58 பேருக்கு இது போன்று கொடூர தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தக் கொடூர தண்டனைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

2 comments:

  1. தண்டனைகள் கடுமையனால்தான் தவறுகள் குறையும். கொலையாளிகளுக்கு நன்றாகவே தெறியும் கொலை செய்தால் என்ன தண்டனை என்று தெரிந்தும் கொலை செய்திருக்கிறார்கள் என்றால் இந்த தண்டனை வரவேற்க்கதக்கது.

    ReplyDelete
  2. இந்த மாதிரி தண்டனை இல்லாததால்தான் இந்தியா போன்றா நாடுகளில் பல குற்றவாளிகள் ரொம்ப சந்தோசமாக நடமாடிகொண்டிருகிரார்கள்..............இது கொடுமைனா..............அவர்களால் கொல்லப்பட்டு இறந்து போன குடும்பத்தின் நிலை என்ன..............உங்கள் குடும்பத்தில் இது போன்று ஒருவர் கொல்லப்பட்டால்...............கொன்றவரை மன்னித்து விட்டுவிடுவீர்களோ...................அப்படி என்றால் சொல்லுகள்...............நான் உங்கள் குடும்பத்தில் ஒருவரை கொள்கிறேன்...........................

    ReplyDelete

Kindly post a comment.