நாட்டில் அமைதி - சமூகஒற்றுமை ஏற்பட வேண்டும் என்ற கருத்தை மையப்பொருளாக முன்வைத்து குஜராத் முதல்வர் நரேந்திரமோடி 3 நாள் ( 72 மணி நேரம்) தொடர் உண்ணாவிரதத்தை ஆமதாபாத்தில் மேற்கொள்கிறார். இந்த விரதத்தில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, , அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் ஆகியோருடன் முஸ்லிம் மக்கள் 10 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
குஜராத் மாநிலத்தின் முதல்வர் மோடி தற்போது உலக அளவில் பேசப்படும் தலைவராக உருவகம் பெற்று வருகிறார்.இவரது ஆட்சி காலத்தில் குஜராத் மாநிலம் இந்தியாவில் நல்ல வளர்ச்சி பெற்று வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. தொழில்வளர்ச்சியில் முன்னணி பாதை நோக்கி சென்று மாநில வளர்ச்சிக்கு மோடி பெரிதும் துணையாக இருந்து வருவதாக பல புள்ளிவிவர அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குஜராத் வன்முறை விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் இந்த விவகாரத்தில் கீழ்கோர்ட்டே முடிவு செய்து கொள்ளலாம் என்று கடந்த வாரம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு பா.ஜ.,வுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்தது. நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை தெளிவுப்படுத்துவதாக பா.ஜ., அறிவித்தது. வரும் காலத்தில் மோடி பிரதமர் பதவிக்கு பா.ஜ., முன்நிறுத்தும் ஒரு நபராக திகழ்வார் என அமெரிக்க பார்லி., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மோடியை சுற்றி தேசிய அரசியல் காற்று வீசிக்கொண்டிருக்கும் தருணத்தில் நாட்டில் அமைதி - சமூகஒற்றுமை, நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் மோடி 3 நாள் தொடர் உண்ணாவிரதத்தை இன்று ( சனிக்கிழமை ) காலையில் ஆமதாபாத்தில் துவக்கினார். குஜராத் பல்கலை., வளாகத்தில் நடக்கும் உண்ணாவிரத மேடையில் இருந்து 5 அடுக்குp பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரதத்தின் முதல்நாளில் பா.ஜ.,மூத்த தலைவர் அத்வானி, ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி, மற்றும் பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் , பஞ்சாப் முதல்வர் ( அகாலிதளம்) பிரகாஷ்சிங்பாதல், இமாச்சல பிரதேச முதல்வர் துமால் பங்கேற்கின்றனர். மாநிலத்தின் 5 மண்டல பகுதிகளில் இருந்து தலா 2 ஆயிரம் முஸ்லிம் மக்கள் வீதம் 10 ஆயிரம் பேர் இந்த விரதத்தில் பங்கேற்கின்றனர் என மாநில பா.ஜ., சிறுபான்மை அமைப்பு கன்வீனர் காதர்ஷேட் கூறியுள்ளார்.
இந்த போராட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் சிறுபான்மை மக்களுக்கு பா.ஜ., மற்றும் குஜராத் அரசு ஆதரவாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் நோக்கமாக இந்த போராட்டத்தில் திரளான முஸ்லிம் மக்கள் தாங்களாக பங்கேற்கின்றனர் என மாநில பா.ஜ., தெரிவித்துள்ளது.
காலையில் விரதத்தை துவக்கிய முதல்வர் மோடி மேடையில் பேசுகையில்; குஜராத் மாநிலம் நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களில் இருந்து மீண்டு இன்று அனைத்து செக்டர்களிலும் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. குஜராத் அனைத்து மாநிலங்களிலும் மாதிரியாக பேசப்பட்டு வருகிறது. சத்பவானா ( நல்லெண்ண உபவாசம் மூலம் ) மூலம் கிராம மக்களுக்கு பெரும் நன்மையை தர முடிந்தது. இன்னும் ஓட்டுக்கு பணம் என்ற நிலையையும் முடிவுக்கு கொண்டு வருவோம். பிற மாநிலத்தவருக்கும் குஜராத் வேலைவாய்ப்பை அளித்து வருவதில் பெருமை கொள்கிறோம். குஜராத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி . இந்த குறுகிய காலத்தில் பெற்ற வளர்ச்சியால் குஜராத் உலகிற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
மேடையில் பேசிய அத்வானி மோடி ஒரு சிறந்த நிர்வாகி, அவர் குஜராத் மாநில வளர்ச்சிக்கு அரும்பாடுபடுகிறார். அவரது பணி பாராட்டத்தக்கது என்றார்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.