யாழ்.பழைய பூங்கா வளாகத்தில் காணப்பட்ட தொன்மை வாய்ந்த கட்டட எச்சங்கள் வடமாகாண ஆளுநர் சந்திரசிறீயின் ஏற்பாட்டில் இடித்தழிக்கப்பட்டிருக்கின்றன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ். அரச செயலக முன்பகுதியில் காணப்படும் பழைய பூங்கா தொல்பொருள் திணைக்களத்தின் கண்காணிப்பிற்கென வழங்கப்பட்டிருந்தது. இந் நிலையில் இன்று திடீரென யாழ்.மாநகரசபையின் துணையுடன் குறித்த காணியில் காணப்பட்ட கட்டட எச்சங்கள் இடித்தழிக்கப்பட்டிருக்கின்றன.
இதற்கான பணிப்பினை வடமாகாண ஆளுநர் சந்திரசிறீ விடுத்ததாக தெரியவந்திருக்கின்றது. அரச அதிபருக்கோ, தொல்பொருள் திணைக்களத்திற்கோ இது குறித்த அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்று தெரியவந்திருக்கின்றது.
0 comments:
Post a Comment
Kindly post a comment.