Sunday, September 18, 2011

வடக்கு தமிழ் மக்களுக்கு சர்வதேச உதவிகள் தேவை : முத்தையா முரளிதரன்

இலங்கையின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு பிரதேச மக்களுக்கு, செல்வந்த நாடுகளிலிருந்து

சர்வதேச உதவிகள் அவசியானது என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் கடந்தகால கசப்பான அனுபவங்களை மீட்டிப்பார்ப்பதனால் எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை. ஈராக் கூட்டுப்படையினர் நடவடிக்கையிலும் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். யுத்தம் என்பது யுத்தமாக தான் இருக்க முடியும், அதில் பொதுமக்கள் இழப்புக்கள் ஏற்படுவது வழமையானதே.

யுத்தம் ஏற்படுவதற்கு அரசியல் வாதிகள் தான் காரணம், மக்கள் அமைதியாக வாழவே விரும்புகின்றனர். நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு இப்போது மெய்யாகவே முன்வருவோர்கள் தேவை. அரசியல் ரீதியாக நடவடிக்கையாக அல்லாது, தனிப்பட்ட நபர்களின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளின் அவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

வடக்கில் திறமையான கிரிக்கெட் வீரர்களும் இருக்கிறார்கள். முறையான பயிற்சிகளை வழங்கினால் அவர்களை சிறந்த முறையில் பிரகாசிக்க வைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முத்தையா முரளீதரன் வடக்கில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.4tamilmedia.com/all/sports/649-2011-09-17-21-25-௪௧

0 comments:

Post a Comment

Kindly post a comment.