'எங்கே
நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய்
இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை
வாழ்க்கை என்றால் என்ன? இதில்
மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.
மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே
மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும்.
மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும்.
இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல,
மாறாக உயிரூட்டுபவர்கள்.
மாறாக உயிரூட்டுபவர்கள்.
ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின்
மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக்
கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி
வருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.
வருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.
ஆசிரியர் ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள் அனைத்தும் அவ்வப்பொழுது இடபெறச் செய்வது இந்த இணைய தளத்தின் சிறப்பு.
இருபது நாளிதழ்களுக்கும் இந்த தளத்திலிருந்தே செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டுரைகள் மற்றும் அறிவியல் செய்திகளுக்கும் பஞ்சமில்லை.
தெரிந்தவர்களுக்கெல்லாம் பரப்புரை செய்ய வேண்டிய அருமையான தளம் இது. எம்/பி./சி. மூன்றும் சேர்த்து இவ்வளவு ரூபாய் என்று ஏலம் போடும் இந்தக் காலத்தில் சேவை நோக்குடைய ஆசிரியப் பெருந்தகையோர்களும் இருக்கின்றனர் என்பதற்குஇந்த இணைய தளம் ஓர் எடுத்துக்காட்டு.
கே.கே. தேவதாஸ் மற்றும் அவருக்குத் துணை நிற்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்
0 comments:
Post a Comment
Kindly post a comment.