Sunday, September 18, 2011

அதிசய 'காட்டுச் சிறுவன்' : இண்டர்போலின் உதவி நாடியது ஜெர்மன் காவல்துறை


http://www.4tamilmedia.com/newses/world/638-german-police-seek-help-over-mystery-forest-bo

ஐந்து வருடங்களுக்கு மேலாக நகர்ப்புற உலகத்துடன் தொடர்பின்றிக் காட்டில் வாழ்ந்து வந்த சிறுவன்வயது17

ஒருவனின் பூர்வீகத்தை கண்டுபிடிக்க ஜெர்மானியக் காவல்துறையினர் ஏனைய நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Ray என அழைக்கப்படும் சிறுவன், தனது தாயார் இறந்த பின்னர், தந்தையால் காட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான். கடந்த ஐந்து வருடங்களாகக் காடுகளிலேயே வாழ்ந்த இருவரும், வெளி உலகத் தொடர்பின்றி இருந்துள்ளனர். கூடாரம் அமைத்து தங்கியதுடன், காட்டில் கிடைக்கும் உணவுகளையே வாழ்வாதாரத்துக்குப் பயன்படுத்தியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தந்தையார் காட்டிலேயே இறந்துவிட்டதைத் தொடர்ந்து, காட்டிலிருந்து வெளியேற நினைத்த குறித்த 'காட்டுச்சிறுவன்' இரண்டு வாரமாக கால்நடையாக பயணம் செய்து பேர்லினை வந்தடைந்துள்ளன.

கடந்த செப்.05ம் திகதி பேர்லின் அவசர தொடர்பு மையத்தில் தஞ்சம் புகுந்துள்ளான். அவனிடம் காவற்துரையினர் விசாரணை மேற்கொண்ட போது, திசைக்காட்டிக் கருவியின் உதவியுடன் இங்கு வந்ததாகவும், தனது பூர்வீகம் பற்றியும், எங்கு பிறந்து வளர்ந்தேன் என்பது பற்றியும் ஒன்றும் ஞாபகத்தில் இல்லை எனவும் தெரிவித்துள்ளான்.

மருத்துவப் பரிசோதனையின் பின் அவனது உடல் நிலையில் எவ்விதப் பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் பேசும் அவன், சிறிது ஜெர்மன் மொழியும் தெரிந்துள்ளான்.

ஐந்து வருடங்களாக காட்டில் வாழ்ந்திருக்கலாம் என்பதற்குச் சான்றாக அவனது பழக்கவழக்கங்கள், நடை உடை அனைத்திலும் வித்தியாசத்தை உணர முடிவதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் இவனது பூர்வீகத்தைக் கண்டுபிடிக்க ஐரோப்பிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இண்டர்போல் காவல்துறையினரின் உதவி நாடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.