Friday, September 16, 2011

ஆதார் தேசிய அடையாள அட்டைக்கான பதிவு செய்துவிட்டீர்களா?

geethasmbasivam6@gmail. ௧௬--0௧௧-

தமிழ், தமிழ் தென்றல், மழலைஸ், இல்லம் குழுமங்களுக்கு எழுதியது.

ஆதார் அடையாள அட்டைக்கான பதிவுகள் செய்து விட்டீர்களா??? இல்லை எனில் உடனடியாகச் செய்துவிடவும். முக்கியமான அடையாளங்களாக ரேஷன் கார்டு, வாக்குப்பதிவு அடையாள அட்டை தேவை.

உங்கள் சரியான பிறந்த தேதி, தாய், தந்தையர் பெயர், பெண் எனில் கூடுதலாகக் கணவர் பெயர், குழந்தைகள் இருந்தால் அவர்களுக்குப் பெற்றோர் பெயர், அல்லது பொறுப்பாளர் பெயர், வங்கிக்கணக்கு விபரம், உங்களுக்கு இமெயில் கணக்கு இருந்தால் அதன் ஐடி, போன்றவற்றை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.

அங்கே உங்கள் கண்விழிகளின் அடையாளங்கள் இரு கைவிரல்களின் அடையாளங்கள், உங்கள் கட்டை விரல்களின் அடையாளங்கள் எடுக்கப்படும். பின்னர் உங்கள் சரியான நிரந்தர விலாசம் சரிபார்த்துச் சேர்க்கப்பட்டு அதற்கு ஒரு அடையாளச் சீட்டுக் கொடுக்கப் படும். அதன் பின்னர் தொண்ணூறு நாட்களில் உங்கள் அடையாள அட்டை வந்து சேரும். இந்தியக் குடிமகன்/குடிமகள் அனைவரும் உடனடியாகப் பதிந்து கொண்டு உங்கள் தேசீய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஏதேனும் ஒன்றில் இதற்கான பதிவுகளைச் செய்கிறார்கள். அம்பத்தூருக்கு பாங்க் ஆஃப் பரோடா. இது போல் உங்கள் பகுதிக்கு எந்த வங்கி என்பதை உங்கள் பகுதியின் செய்திகளை அளிக்கும் தினசரிக்குறிப்புகளில் இருந்து அறியவும். இதற்குப் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்படாததால் பலரும் அறியவில்லை. அரசு இதற்கு விளம்பரம் இயன்றால் முழுப்பக்க விளம்பரம் செய்ய வேண்டும்.

நாங்கள் பதிந்து விட்டோம்! அப்போ நீங்கள்???

0 comments:

Post a Comment

Kindly post a comment.