Sunday, January 10, 2010

7 லட்ச ரூபாயில் வெற்றிவேல் திரும்பக் கிடைப்பாரா? 3 மாதங்களுக்குள் நியாயத் தீர்ப்பு வழங்க வேண்டும் !

வெற்றிவேலின் சொந்த ஊர் உப்பத்தூர், சாத்தூர் வட்டம்,விருதுநகர் மாவட்டம்!

மனைவி பெயர் பிரேமா! அசோக் குமார் வயது 15, சிந்து பாரதி 13, வாரிசுகள்!

வயதான தாயாரும், கர்ப்பிணி சகோதரியும் உண்டு!

முதலிரண்டு தகவல்களைத் தினத்தந்தியும், கடைசித் தகவலை mumbai mirror-ம் தந்துள்ளன.









44 வயதுடைய சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், ஆள் மாறாட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதிச் சடங்குகள், முள்ளிக்குளத்தில் உறவினர்கள் முன்னிலையில் நிகழ்ந்தது. 21 குண்டுகள் மரியாதை நிமித்தம் வெடிக்கப் பட்டன.

வழக்கம்போல் பொறுப்பில் உள்ளவர்கள் செய்வதை தமிழக முதல்வரும் செய்திருக்கின்றார். அனுதாபம்- 7 லட்சம் பணம்- குடும்பத்தில் ஒருவருக்கு வேலை.

ஏ.கந்தசாமி, பி.கண்ணபிரான், சண்முகசுந்தரம் கைது. மேலும் 10 பேர் தேடல். தாமதிக்கப் படும் நீதி, மறுக்கப்படும் நீதி! 3-மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப் படல் வேண்டும்.

வெற்றிவேல் தனி நபரா, மனைவி-வாரிசுகள் விபரம் எதுவும் தெரியவில்லை. எந்தப் பத்திரிக்கையிலும் இது குறித்த தகவல்கள் எவையும் இல்லை.தினத்தந்தியில் கூட குடும்பம் குறித்த விபரம் இல்லை. குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகள் அவ்வளவுதான். மகளுக்குத் திருமணம் ஆகியிருந்தால் வேலை கிடைக்காது. மகன் உண்டா இல்லையா? வயது என்ன? மனைவி உயிரோடு இருக்கின்றாறா இல்லையா? இந்தப் பணமும் வேலையும் யாருக்குப் போய்ச் சேரும்? நடைமுறைச் சம்பிரதாயங்களுக்காக வெளியிடப்பட்ட செய்திதானா? என்ற சந்தேகம் எல்லாம் எழுகின்றது. அந்தப் பணத்திற்காகவும், வேலைக்காகவும் வேறு துர்ச்சம்பவங்கள் ஏற்படாதிருக்க வேண்டுமே என்று மனம் அஞ்சுகின்றது.

கணவன்-மனைவி தகராறு. விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில். மனைவியின் சகோதரன், சோதரியின் கணவனைக் கொல்ல இரு முறை முயற்சி. அவர் தப்பித்து விடுதல். மூன்றாவது தடவை தவறுதலாக வெற்றிவேல் தாக்குண்டு படுகொலை!

MATHURAI THINAKARAN VAZHAKKIL முழுப் பூசணி மறைக்கப் பட்டது போல் இந்த வழக்கில் எதுவும் நடக்காமல் இருந்தாலே போதுமானது.

தென்மாநிலப் பகுதிகளில் வருமுன் காக்க தனி முயற்சிகள் மேற்கொள்ளுதல் அவசியமான செயலாகும். நம் வீட்டில் இது போன்றதொரு துர்ச்சம்பவம் நிகழ்ந்தால் என்ன செய்வோமோ அதனை அநியாயமாக ஆள்மாறாட்டத்தில் ..........?

வெற்றிவேலுக்கு வயதான தாயாரும், கர்ப்பிணிச் சகோதரியும் இருப்பதாக, மும்பை மிரர்.காம் செய்தி தந்துள்ளது.

பின்வரும் y-tube parkkalaam.

http://www.youtube.com/watch?v=NUsi3FJtBAg&feature=youtube_gdata



http://www.in.com/videos/watchvideo-si-mrrvetrivel-killed-brutally-by-politicians-6074521.html

வெற்றிவேல் திருமணம் ஆனவர். மனைவி பெயர் பிரேமா! அசோக் குமார் வயது 15, சிந்து பாரதி வயது 13, என்ற வாரிசுகள் உண்டு. தினத்தந்தி 08-01-2010 -ல் வெளியாகியுள்ளது.

பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டா போய்விடும்! அந்த நிலையில் இருந்துவிட்டேன். தினத் தந்தியிலேயே வரவில்லை என்றால், வேறு பத்திரிக்கைகளில் வந்திருக்காது என்ற எண்ணத்திலேதான் அவ்வாறு எழுதினேன்.

4 comments:

  1. Can you please verify the age of Vetrivel and correct if required?

    -PNS

    ReplyDelete
  2. வயதைச் சுட்டிக் காட்டித் திருத்துவதற்கு உதவிய PNS அவர்களுக்கு நன்றி. திருமணம் ஆனவரா/மனைவி உண்டா/ குழந்தைகள் விபரம் எதுவும் கிடைக்கவில்லை.ரத்தக் கண்ணீர் வடிக்க மட்டுமே முடியும்.குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்கை முடித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குமா இந்த அரசு? அப்பகுதியில உள்ள மனித உரிமை அமைப்புக்கள் கவனம் செலுத்தினால் நல்லது. நெல்லை மாவட்ட தாதாக்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்றவற்றிற்கு கூலியாட்கள் கிடைத்திருப்பார்களா? எங்கே போகின்றோம் நாம்?

    ReplyDelete
  3. வெற்றிவேல் திருமணம் ஆனவர். மனைவி பெயர் பிரேமா! அசோக் குமார் வயது 15, சிந்து பாரதி வயது 13, என்ற வாரிசுகள் உண்டு. தினத்தந்தி 08-01-2010 -ல் வெளியாகியுள்ளது.

    பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டா போய்விடும்! அந்த நிலையில் இருந்துவிட்டேன். தினத் தந்தியிலேயே வரவில்லை என்றால், வேறு பத்திரிக்கைகளில் வந்திருக்காது என்ற எண்ணத்திலேதான் அவ்வாறு எழுதினேன்.
    You might also like:

    ReplyDelete
  4. வெற்றிவேலின் சொந்த ஊர் உப்பத்தூர், சாத்தூர் வட்டம்,விருதுநகர் மாவட்டம்!

    மனைவி பெயர் பிரேமா! அசோக் குமார் வயது 15, சிந்து பாரதி 13, வாரிசுகள்!

    வயதான தாயாரும், கர்ப்பிணி சகோதரியும் உண்டு!

    முதலிரண்டு தகவல்களைத் தினத்தந்தியும், கடைசித் தகவலை mumbai mirror-ம் தந்துள்ளன.

    ReplyDelete

Kindly post a comment.