Sunday, November 22, 2015

மூன்று நாட்களில் உருவாக்கப்பட்ட காகிதப் பாலம் !



சீனாவின் சுஸொவ் பகுதி கிழக்கின் வெனிஸ் என்று அழைக்கப்படுகிறது. இங்கே 3 நாட்களில் காகிதங்கள் மூலம் ஒரு பாலம் உருவாக்கப்பட்டது. 54,390 காகிதங்களை வைத்து, 2,374 கிலோ எடைகொண்ட பாலத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் காகிதங்கள் இரு பக்கங்களிலும் உள்ள தூண்களின் உதவியோடு நிற்கின்றன. ரேஞ் ரோவர் கார்களின் 45-வது ஆண்டு கொண்டாட்டத்துக்காக இந்தக் காகிதப் பாலம் உருவாக்கப்பட்டது. காகிதங்கள் பசையாலோ, போல்ட்களாலோ இணைக்கப்படவில்லை. நெருக்கமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 5 மீட்டர் நீளமுடைய இந்தக் காகிதப் பாலத்தின் மீது ரேஞ் ரோவர் கார் ஏறிச் சென்றது. இந்தக் காகிதங்கள் அனைத்தும் மறுசுழற்சி முறையில் உருவாக்கப்பட்டவை.
அட, ஒரிகாமி பாலம்!

நன்றி :- உலக மசாலா , தி  இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.