ஞாயிறு, 1 நவம்பர், 2015
வணக்கம். வலைப்பதிவர்விழாவின் வரவுசெலவு அறிக்கையை, நிதிப்பொறுப்பாளர் சகோதரி மு.கீதா தயாரித்து விழாக்குழுவின் சார்பாக வெளியிட்டுள்ளார். அதனை இங்கு நானும் பகிர்கிறேன். அவரது உழைப்பும், ஈடுபாடும் விழா வெற்றிக்கு அடிப்படையாக நின்றதை அனைவரும் அறிவர்.
விழாவில் நன்றியுரை - நிதிப்பொறுப்பாளர் மு.கீதா -------------------------------------------------------------- |
விழாக்குழுவினர் அனைவரும் போட்டிபோட்டு உழைத்தாலும், இந்த விழாவின்வெற்றி முகத்திற்கு இரண்டு கண்கள் உண்டெனில் அவை இரண்டும் நிதிப்பொறுப்பாளர் மு.கீதா, உணவுக்குழுத் தலைவர் இரா.ஜெயலட்சுமி இருவருமே ஆவர். இவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
விழாக்குழுவின் ஏனைய பொறுப்பாளர்களின் கால நேரம்பாராத கடும் உழைப்பு சொல்லில் விவரிக்க இயலாது. அதன் அடிப்படையாக சமூக உணர்வுடன் கூடிய அன்பும், நமது மரபார்ந்த பண்பும் இருந்தது.
பதிவர்விழா-நம் குடும்பவிழா!
எங்கெங்கோ இருந்துகொண்டு, இந்த விழாவைத் தம்வீட்டு விழாவைப் போலெண்ணி, எழுதி-பணம் அனுப்பி-மற்றவர் ஈடுபாட்டை உசுப்பிவிட்டு எங்களை மறைமுகமாக ஆட்டுவித்த நம் பதிவர்களுக்கு எப்படி நன்றி சொல்ல? அவர்களை யெல்லாம் வணங்கி இந்த வரவுசெலவு அறிக்கையை சமர்ப்பணம் செய்கிறோம்.
நன்றி - http://velunatchiyar.blogspot.com/2015/10/2015_18.html
மொத்த வரவு
|
ரூ. 3,24,671
|
மொத்தச் செலவு
|
ரூ. 3,21,842
|
கையிருப்பு
| ரூ. 2,829 |
நன்றி : http://bloggersmeet2015.blogspot.com/
வலைப்பதிவர் விழா 2015 - புதுக்கோட்டைக்குத்தான் செல்ல இயலவில்லை. கரந்தை ஜெயகுமார் உதவியால் விழாவில் வெளியிடப்பட்ட 3 புத்தகங்களும் கிடைக்கப்பெற்றன.. இரத்தினச் சுருக்கமாக இந்த முதல் பதிவு.
மீள் பதிவுக்கு நன்றி அய்யா. நேரம் கிடைக்கும்போது, படித்துவிட்டு, புத்தகங்களைப் பற்றிய தங்கள் மதிப்புரைகளை எழுத வேண்டுகிறேன்
ReplyDeleteமிக்கநன்றி அய்யா.
ReplyDelete