புதுமைகள் படைக்கும் புதுகை
நண்பர்களே, இன்னும் இரண்டே, இரண்டு நாட்கள்தான் இருக்கின்றன.
புதுகை வலைப் பதிவர் சந்திப்பிற்கு.
இவ்வாண்டு சந்திப்பில்தான் எத்தனை எத்தனை புதுமைகள்.
வலைப் பதிவர் கையேடு தயாராகிவிட்டது.
ஐவகைப் போட்டிகளில் பங்கு பெற்று, வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பெற இருக்கின்றன. தமிழ் கூறு நல்லுலகே காத்துக் கொண்டிருக்கிறது.
ஐவகைப் போட்டிகளில் யார், யார் வெற்றி பெறுவார் என்று முன்னரே, கணித்து அறிவிக்கும் போட்டிக்கு நாளை, இறுதி நாள்.
நாளை மறுநாள், போட்டியில் வெற்றி பெற்றவர்கள் யார் யார், போட்டா போட்டியில் வெற்றி பெற்றவர்கள் யார், யார் என்பது தெரிந்து விடும்.
வெற்றி பெற இருப்பவர்களுக்கு, இப்பொழுதே நமது வாழ்த்தைச் சொல்லி வைப்போம்.
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்
நண்பர்களே, இன்று வலையில் நுழைந்து, பதிவர்களின் எழுத்து மழையில் நனைந்து, மகிழ்ந்த போது, இரு காட்சிகளைக் கண்ணாரக் கண்டேன். கண்டு மகிழ்ந்தேன், நெகிழ்ந்தேன்.
முதல் காட்சி, பதிவர்களுக்கான இலச்சினை (Logo). ஆங்கில வலைப் பூக்களைக் குறிக்க பல வகையான இலட்சினைகள், இணையத்தில் வலம் வருவதைக் கண்டிருப்போம்.
ஆனால் உலகினையே வலம் வரும் வல்லமை வாய்ந்த, தமிழ் மொழியின் வலைப் பூவோ, தனித்த அடையாளம் இன்றியே இதுநாள் வரை தவித்து வந்தது.
இதுவே நமது தமிழ் வலைப் பூவின்
தனித்த அடையாளம்,
இந்த இலட்சினை உலகை வலம் வரட்டும்.
கவிஞர் ஐயா அவர்களின்
அயரா, தளரா முயற்சியைப் போற்றுவோம்.
வலைப் பூவிற்கு இலட்சினை கிடைத்த மகிழ்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள், அடுத்து ஓர் இன்ப அதிர்ச்சி.
வலைப் பூவிற்குப்
புதிதாய்
ஓர் தேசிய கீதம்.
உண்மை நண்பர்களே, உண்மை.
இதோ
வலையின் கீதம்
படித்துப் பாருங்களேன்
பரவசப்பட்டுப் போவீர்கள்.
ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு வலைப்பூவுமே... சொல்கிறதே...
கருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே...
நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வலைப்பூவில்...
பதிவுகள் நிச்சயம் சிறக்கும் ஒரு நாளில்...!
மனமே ஓ மனமே நீ மாறிவிடு...
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போக கூடாது...
"என்ன இந்த வலைப்பூ...?" என்ற
எண்ணம் தோன்றக் கூடாது...
எந்த வலைப்பூ பதிவில்
கருத்தில்லை சொல்லுங்கள்...
காலப்போக்கில் கருத்தெல்லாம்
மாறி போகும் மாயங்கள்...!
கருத்து தாங்கும் பதிவுகள் தானே
முன்னணி பதிவில் நிலையாகும்...
எதையும் தாங்கும் உள்ளம் தானே
நிலையான நட்பு காணும்...
யாருக்கில்லை போராட்டம்...?பகிர்ந்து கொள்ள ஏன் தயக்கம்...?ஒரு கனவு கண்டால்...
அதை தினம் பகிர்ந்தால்...
ஒரு நாளில் நிஜமாகும்...!
மனமே ஓ மனமே நீ மாறிவிடு...
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!
ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
வலைப்பூ பகிர்வை வாசிப்போம்...
வானம் அளவு யோசிப்போம்...
பதிவுகள் என்ற ஒன்றை மட்டும்...
பகிர்ந்து கொண்டு சிறப்பிப்போம்...
லட்சம் பதிவுகள் கண்ணோடு...
லட்சியங்கள் நெஞ்சோடு...
நம்மை வெல்ல யாருமில்லை...
உறுதியோடு போராடு...!
பதிவரே... உன் மனதை கீறி
பதிவு போடு மரமாகும்...
கருத்துரை மறுமொழி
எல்லாமே நட்பாகும்...
பதிவுகள் இன்றி வலைப்பூவா...?நேரம் ஏனில்லை என் தோழா...?ஒரு முடிவிருந்தால்... அதில் தெளிவிருந்தால்...
வலைப்பூ வானில் சிறகடிக்கும்...
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!
ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு வலைப்பூவுமே... சொல்கிறதே...
கருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே...
நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வலைப்பூவில்...
பதிவுகள் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்...
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு வலைப்பூவுமே... சொல்கிறதே...
கருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே...
நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வலைப்பூவில்...
பதிவுகள் நிச்சயம் சிறக்கும் ஒரு நாளில்...!
மனமே ஓ மனமே நீ மாறிவிடு...
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போக கூடாது...
"என்ன இந்த வலைப்பூ...?" என்ற
எண்ணம் தோன்றக் கூடாது...
எந்த வலைப்பூ பதிவில்
கருத்தில்லை சொல்லுங்கள்...
காலப்போக்கில் கருத்தெல்லாம்
மாறி போகும் மாயங்கள்...!
கருத்து தாங்கும் பதிவுகள் தானே
முன்னணி பதிவில் நிலையாகும்...
எதையும் தாங்கும் உள்ளம் தானே
நிலையான நட்பு காணும்...
யாருக்கில்லை போராட்டம்...?பகிர்ந்து கொள்ள ஏன் தயக்கம்...?ஒரு கனவு கண்டால்...
அதை தினம் பகிர்ந்தால்...
ஒரு நாளில் நிஜமாகும்...!
மனமே ஓ மனமே நீ மாறிவிடு...
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!
ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
வலைப்பூ பகிர்வை வாசிப்போம்...
வானம் அளவு யோசிப்போம்...
பதிவுகள் என்ற ஒன்றை மட்டும்...
பகிர்ந்து கொண்டு சிறப்பிப்போம்...
லட்சம் பதிவுகள் கண்ணோடு...
லட்சியங்கள் நெஞ்சோடு...
நம்மை வெல்ல யாருமில்லை...
உறுதியோடு போராடு...!
பதிவரே... உன் மனதை கீறி
பதிவு போடு மரமாகும்...
கருத்துரை மறுமொழி
எல்லாமே நட்பாகும்...
பதிவுகள் இன்றி வலைப்பூவா...?நேரம் ஏனில்லை என் தோழா...?ஒரு முடிவிருந்தால்... அதில் தெளிவிருந்தால்...
வலைப்பூ வானில் சிறகடிக்கும்...
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!
ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு வலைப்பூவுமே... சொல்கிறதே...
கருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே...
நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வலைப்பூவில்...
பதிவுகள் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்...
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு
நண்பர்களே,
படிக்கப் படிக்க நெஞ்சம் இனிக்கிறதல்லவா.
வலை கீதத்தை எழுதியவர் யார் தெரியுமா?
வலைச் சித்தர்
திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்கள்தான்.
வலையுலக உறவுகளின் சார்பில்
திண்டுக்கல்லாருக்கு
வாழ்த்துக்களைப், பாராட்டுக்களைச்
சமர்ப்பிப்போம்.
வலைச் சித்தருக்கு
மேலும்
புதிதாய், புத்தம் புதிதாய்
ஓர் பட்டம்
வழங்கி மகிழ்வோமா.
வலைக் கவி, வலைக் கவி, வலைக் கவி
நண்பர்களே,
எனக்கு ஓர் ஆசை
வலைக் கவியின்
வலை கீதத்தை
நமது
பெருமை மிகு சுப்பு தாத்தா அவர்கள்
பாடினால் எப்படி இருக்கும்.
வலை உறவுகளின் சார்பில்
திரு சுப்பு தாத்தாவை வேண்டுவோம்
ஐயா,
தங்களின் தெய்வீகக் குரலால்
வலை கீதத்தைப் பாடுங்கள்
பாடலினை இணையத்தில் பதிவேற்றம் செய்யுங்கள்
உலகெலாம் ஒலிக்கட்டும்
நமது கீதம்.
என்ன நண்பர்களே,
புதுகைக்குப் புறப்படத் தயார்தானே,
வாருங்கள், புதுகையில் சந்திப்போம்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.