Thursday, April 9, 2015

இரண்டு சொட்டுக் கடல் - வித்யாசாகர்

1
த்தத்தில்
மறையும் உலகை
மௌனத்தால் திறக்கிறேன்.,

ரத்தத்தில்
உறையும் மனிதத்தை
அன்பினால்  பிரிக்கிறேன்.,

முத்தத்தில்
ஊறும் மனதிரண்டை
இதோ இதோ -
உனக்காக ஒன்றும்
எனக்காக ஒன்றுமாய்க் கேட்கிறேன்..

உலகெங்கும்
பூக்கும்
புன்னகையனைத்தையும்
மனதால்
பறித்துக்கொண்டு வா பெண்ணே

முத்தங்களின்
சிறகு ஒன்று நீ
மற்றொன்று நானாய்
அன்பிருக்கும் வானமெங்கும் பறப்போம்
.
அன்பு தீரும்போது
அங்கேயே
இறப்போம்..

நம் இறப்பு சொட்டும்
மழைதோறும்
ஈரந்தோறும்
கடல்
கடலாய் கடலாய்
இப்பூவுலகு
வனமாய் வனமாய்
வெளியெங்கும் அழகு சொட்டச் சொட்ட
மீண்டும் -
புதிதாய்ப் பிறக்கட்டும்!!!
-------------------------------------------------

2
து ஆணலை
அது பெண்ணலை
ஆனால் -
இரண்டுமே கடல்..

இது நீலம்
அது வெள்ளை
ஆனால் -
இரண்டுமே வானம்..

இது காற்று
அது நீர்
ஆனால் -
இரண்டுமே உயிர்..

இது உயிர்
அது உடல்
ஆனால் -
இரண்டுமே நீ..

என் நீ!!
--------------------------------------------
வித்யாசாகர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.