Wednesday, November 13, 2013

சோனியா காந்திக்கு கோவில் கட்டுகிறார் தெலுங்கானா எம்.எல்.ஏ.

மாலைமலர்-13-11-2013

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், செகந்திராபாத் கண்டோன்மென்ட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பி.சங்கர்ராவ் அவரது தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கோவில் ஒன்று கட்டப்போவதாகக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் சட்டமன்ற கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது மேற்கண்ட விபரத்தை அவர் வெளியிட்டார்.

தனித் தெலுங்கானா கோரிக்கையை செயல்படுத்தியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்தக் கோவில் கட்டப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். சோனியாவின் பிறந்தநாளான வரும் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி செகந்திராபாத்தில் இந்தக் கோவிலுக்கான அடித்தளம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், தெலுங்கானா பகுதியில் வரும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் நன்றியைத் தெரிவிக்கும் விதத்தில் தங்கள் தொகுதியிலும் சோனியாவிற்கான கோவில்களைக் கட்டும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

தெலுங்கானா பகுதியில் முதலமைச்சர் என்.கிரண்குமார் ரெட்டி நடத்த உள்ள ரக்சாபந்தன் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், தனித் தெலுங்கானா உருவாவதை எதிர்த்த இவர் அந்தத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்வதற்கு எந்த உரிமையும் இல்லை என்று சங்கர்ராவ் தெரிவித்தார்.              






0 comments:

Post a Comment

Kindly post a comment.