Monday, November 18, 2013

55 – ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசிக்கும் கோடீஸ்வரர்.

warren-buffett house
WARREN BUFFETT  HOUSE
warren_gates1பில்கேட்சுடன்  இப்பதிவின்  நாயகன்
உலகில் வெற்றி பெற்ற பங்குச்சந்தை முதலீட்டாளர்களில் வாரேன் பப்பேட்டும் ஒருவர். இவரது சொத்தின் மொத்த மதிப்பு  இந்திய ரூபாய்க் கணக்கில் சொல்லப்போனால் 2,48,000 கோடி. 55 ஆண்டுகளுக்கு முன் வாங்கிக் குடியேறிய வீட்டிலேயே இன்றளவும் வசித்து வருகின்றார். வசதிகள் வந்துவிட்டனவே என்று வீட்டை மாற்றிக் கொள்ளவில்லை. 

சென்னையில் எமக்கு அறிமுகமான ஒரு  தனியார்துறையின்  நிறுவனர் , தமது  வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் என்ன கைப்பையை உபயோகித்தாரோ அதனையேதான் இன்றும் பயன்படுத்தி வருகின்றார். அவரது நிறுவனத்தில் பணியாற்றுவோர் அனைவருக்கும் மதிய உணவும் அளித்து வருகின்றார். விரும்புபவர்கள் வீட்டிலிருந்தும் கொண்டு வந்து மதிய உணவருந்திக் கொள்ளலாம்.. ஏனெனில், தன் விருப்பத்தை மற்றவர்களின் மேல் திணித்து அவர்களுடைய உரிமையில் தலையிடக்கூடாது என்ற பெருந்தன்மைதான் காரணம். அதே நேரத்தில் தமது துவக்க காலத்தில் பசியின் கொடுமையை அனுபவித்த காரணத்தால், யாரும் பசிக்கொடுமையால் துன்புறக் கூடாது என்பதைத் தமது வாழ்க்கையின் குறிக்கோள்களில் ஒன்றாகக் கடைப்பிடித்து வருகின்றார். மதிய உணவு நேரத்தில் அவரைச் சந்திக்க வருவோருக்கும் இதே உபசரிப்பும் தாராளாமாய்க் கிடைக்கும். யார் அவர் என்று வினா எழுப்புவோருக்கு ஒரு சிறு குறிப்பு மட்டும் தருகின்றோம். சொல்லத் துடிக்குது மனசு என்ற புத்தகத்தை எழுதியவர். அதன் சிறப்பு குறித்து ;- ” இந்நூல் உங்களுக்கோ சமூகத்துக்கோ  பயன்தராது எனக் கருதினால் கொடுத்த காசைத் திரும்பப் பெற்றுக்கொண்டு இந்நூலைக் கிழித்தெறியுங்கள் ” மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டால் நூல் கிடைக்குமிடம் குறித்துப் பதில் கிடைக்கும்.
 
மேற்கண்ட பத்தியை எழுதிடக் காரணம், ஆங்கிலச் சஞ்சிகைகளிலோ அல்லது அதைப்பார்த்து சிறு செய்தியாககவோ கட்டுரையாகவோ எழுதப்பட்டனவற்றைப் படித்தோக்குத் தமிழகத்திலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகத்தான். 

சரி ,  மீண்டும் வாரேன் பப்பேட்டைச் சந்திப்போமா?  இன்றைய THE ECONOMIC TIMES WEALTH சிறப்புப் பகுதியில்தான் அந்தக் கோடீஸ்வரைப்ப்றிய தகவல் கிடைத்தது. பின்னர் இணையத்துள் சென்றால் அவரைப்பற்றி ஏராளமான தகவல்கள் கிடைத்தன. அனைத்தையும் பதிவிடப்போனால் கட்டுரையாகிவிடும். எனவே, இரண்டே இரண்டு செய்திகளை மட்டும் இங்கே வலைப்பூ அன்பர்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.

தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவித்தால் ,விரைவில் நமக்குத் தேவையான பொருட்களை விற்றுத்தான் வாழ வேண்டும் என்ற நிலைமைக்குக் கூடத் தள்ளப்படுவோம். தேவை என்பது வேறு ; ஆசை என்பது வேறு ; தேவைகளைப் பட்டியலிட்டு வரிசைப்படியும், வசதிப்படியும் வாங்கிக்கொண்டே போகலாம். ஆசைபபடுவனவற்றைறை எல்லாம் வாங்கத் துவங்கினால் வீழ்ச்சி நிச்சயம் இது அவரது வெற்றிக்குப் பின்  இருக்கக்கூடிய ஒரு ரகசியம். 

 நல்ல நடைமுறை :-      வருமானம் – சேமிப்பு = செலவுகள்
 மோசமான நடைமுறை :- வருமானம் – செலவினங்கள் = சேமிப்பு    
 இது அவருடைய வெற்றிக்குப்பின் இருக்கக்கூடிய இன்னொரு இரகசியம்.
  
 மாதக் கடைசியிலும், வாழ்வின் இறுதியிலும் இன்னலின்றி வாழ்ந்திட இவைகள்     நல்லநடைமுறைகள்தானே ?/.

அவரது வெற்றிக்குக் காரணமான பல்வேறு தகவலகள் இணையத்திலேயே பரவலாக உள்ளன.. பார்க்கலாம். படிக்கலாம். நடைமுறைக்கும் கொண்டுவரலாம்.  வாழக்கை இனிதாயிருக்கும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.