Wednesday, August 28, 2013

இடைக்காட்டுச் சித்தர் -தொகுப்பு-செங்கைப் பொதுவன்

Image


இடைக்காட்டுச் சித்தர்


நாராயணக் கோனார் கூற்று

ஆதி பகவனையுஏ பகவே - அன்பாய் நினைப்பாயேல்
சோதிப் பரகதிதான் பசுவே - சொந்தமா தாகாதோ? ( 33 )
குறிப்பு :- அன்புதான் ஆதிபகவன்

பலரோடு கிளத்தல்
பாலிற் சுவை போலும் பழக்கத்தில் மதுப்போலும்
நூலிற்பொருள் போலும் நுண்பொருளைப் போற்றீரே ( 33 )

அறிவோடு கிளத்தல்

இருட்டறைக்குள் நல் விளக்கம் இருக்கும் உன்றன் வல்லமையை
அருள் துறையில் நிறுத்தி விளக்கு ஆகுக நீ புல்லறிவே ( 72 )

கைவிளக்கைக் கொண்டு கடலில் வீழ்வார்போல்
மெய் விளக்கு உன் உள் இருக்க வீழ்குவதேன் புள்ளறிவே ( 74 )

அன்னத்தோடு கிளத்தல்
அப்புடனே உப்பு சேர்ந்து அளவு சரியானது போல
ஒப்புரவாய்ப் பிரமமுடன் ஒன்றி நில்லு மடஅனமே (94 )

காய்ந்த இரும்பு நிறம் காட்டுதல் போல் - ஆத்துமத்தை
வாதிலங்க்கச் செய்து வளம்பெறு நீ மட அனமே ( 95 )

பால் கறத்தல்

சாவாது இருந்திடப் பால்கற சிரம் - தன்னில் இருந்திடும் பால்கற
வேவாது இருந்திடப் பால்கற -வெறு- வெளிக்குளே பால்கற

Image

செங்கைப் பொதுவன்


தொகுப்பு :- "தெய்வ அலை" - "தெய்வீக அலை"
செங்கைப் பொதுவன், புலவர், முனைவர்,.M.A. M.Ed. Ph.D.
வீடு 22, , 13, தில்லை கங்கா நகர், சென்னை- 600 061.

வெளியீடு - வசந்தா பதிப்பகம், ,மனை எண் 9, கதவு எண் 26,
ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை- 600 088.
044- 2231 1819, 044- 2253 3667

0 comments:

Post a Comment

Kindly post a comment.