தியாகி எல்.கே.பி. இலகுமையா 100ஆவது பிறந்தநாள் விழா, அக்டோபர்,3,2012
காந்திக்கிராமம் உருவாக்க 25 ஏக்கர் நிலம், ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை தானமாக வழங்கிய சுதந்திரப் போராட்டத் தியாகி எல்.கே.பி. இலகுமையாவின் நூறாவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
காந்திக்கிராமக் கிராமியப் பல்கலைக் கழகம், காந்திக்கிராமக் குடும்ப நல அறக்கட்டளை, டாக்டர் சௌந்தரம் அறக்கட்டளை இணைந்து நடத்திய விழாவுக்கு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் என்.எஸ்.வி. சித்தன் தலைமை வகித்தார்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் சோம.ராமசாமி, முன்னாள் துணைவேந்தர் ஜி.பங்கஜம், காந்திக்கிராம அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எம்.ஆர்.இராஜகோபால், செயலாளர் ஆடிட்டர் கே.சிவக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எஸ்.பொன்னம்மாள், மா.தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
\
காந்தியடிகளின் உத்தரவுபடி டாக்டர் டி.எஸ். சௌந்தரம் காந்திகிராமம் அமைக்க இடம் தேடிய போது திண்டுக்கல்லை அடுத்த சின்னாளபட்டி அருகே உள்ள 25 ஏக்கர் நிலத்தையும், ரூ.25 ஆயிரம் ரொக்கத்தையும் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தியாகி லகுமையா ஒப்படைத்து காந்திகிராமத்தை உருவாக்கியதையும், 2.2.1946ஆம் ஆண்டு மதுரைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த காந்தியடிகளை பொதுமக்கள் தரிசிக்கும் வகையில் அம்பாத்துரை ரயில் நிலையம் அருகே ரயிலை லகுமையா நிறுத்தியதையும், அவரின் சுதந்திரப் போராட்ட ஈடுபாட்டினையும் விழாவில் பேசியவர்கள் நினைவு கூர்ந்தனர்.
விழாவில் கலந்து கொண்ட தியாகி லகுமையாவின் சார்பில் அவரது மகன் இராஜேந்திரன் ஏற்புரை நிகழ்த்தினார்.
இ 9 16-04-2013லகுமையா பெயரில் அறக்கட்டளையைத் துவக்கி, திண்டுக்கல் எம்.பி. என்.எஸ்.வி.சித்தன் ரூ.50 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினார்.
நன்றி :- தினமணி 03-10-2012
காந்தியவாதி கே.பி. இலகுமையா காலமானார்
விக்கிப்பீடியாவில் எல். கே. பி. லகுமையா http://ta.wikipedia.org/s/2r1a
ReplyDelete