Saturday, April 27, 2013

நேர் நேர் தேமா -கோபிநாத் 21-சாதனையாளர்களின் நேர்காணல்கள் !

    கோபிநாத், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்கம் 192, விலை ரூ. 100
    Dial For Books – 94459 01234 | 9445 97 97 97

‘அகந்தை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆண்டவன் ரொம்ப காலம் நம்மை வறுமையில வச்சிருந்தாருன்னுதான் நான் எடுத்துக்கறேன்’ என்ற சாலமன் பாப்பையா தொடங்கி, பத்மா சுப்ரமணியம், எம்.என்.நம்பியார், கே.பாலசந்தர், வைரமுத்து, சிவக்குமார், எம்.எஸ்.விஸ்வநாதன், ‘நான் தமிழன் என்பதன் அடையாளம்தான் இந்த வேஷ்டி சட்டை. இதை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். அதைப் பெருமையாக நினைக்கிறேன்’ என்ற ப.சிதம்பரம், ‘என்னுடைய பொது வாழ்க்கைப் பயணத்தில் நான் பாலத்திலே நடக்கிறபோது இரண்டு புறமும் இருக்கிற இரண்டு கைப்பிடிகளைப் போல, ஒரு பக்கத்திலே இலக்கியம், இன்னொரு பக்கத்திலே அரசியல் இருக்கிறது’ என்ற கலைஞர் கருணாநிதி ஈறாக, 21 சாதனையாளர்களின் நேர்காணல்களைக் கட்டுரை வடிவில் தந்துள்ளார் நூலாசிரியர்.

‘தன்னை எப்படி வடிவமைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறவர்களுக்கு, இந்தப் புத்தம் சில முன்னுதாரணங்களைச் சொல்லக் கூடும்’ என்னும் கோபிநாத்தின் நம்பிக்கை வீண்போகாது.
விமர்சனம்: தினமலர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.