Sunday, March 24, 2013

மகாராஷ்டிரா: ஜைன பெண் துறவியைக் கற்பழித்த காமுகன் கைது !



போபால், மார்ச் 24-

மகாவீர் ஜெயினின் அகிம்சைl கொள்கையை நாடு முழுவதும் பரப்பிடும் நோக்கத்தில் வசதியான ஜைனர்களில் சிலர், குடும்பத்தை விட்டுப் பிரிந்து துறவிகளாகச் சமயப்பணி ஆற்றி வருகின்றனர். செல்வம், இளமை, அழகு இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஜைனப் பெண்களில் சிலரும் குடும்பத்தை பிரிந்து துறவு வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்.

இவ்வகையில் துறவறம் மேற்கொள்ளும் பெண்கள், நாடெங்கிலும் உள்ள ஜைனக் கோயில்களுக்குச் சென்று சேவை மற்றும் உபதேசங்களைச் செய்து வருகின்றனர்.

இதைப் போல், மத்தியப் பிரதேச மாநிலம், பிந்த் மாவட்டத்தில் சேவை செய்து வந்த இளம்வயதுப் பெண் துறவியைக் கடந்த வாரம் சில நபர்கள் கடத்திச் சென்று அசோக் தோபி என்பவர் வீட்டில் வைத்துக் கற்பழித்துள்ளனர்.

அந்தக் காமுகர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அந்தப் பெண் துறவி நடத்திய போராட்டத்தில் அவருடைய உடலின் 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அவர் கூறிய அடையாளங்களின்படி அசோக் தோபியைக் கைது செய்த போலீசார், அவர்மீது ஆள் கடத்தல், கற்பழிப்பு, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் மற்றக் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.                                                         

நன்றி :-மாலை மலர், 24-03-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.