Wednesday, February 20, 2013

சீர்காழி தமிழிசை மூவர் மணி மண்டபம் இன்று திறப்பு !

தமிழிசை மூவருக்காக சீர்காழியில் ரூ.1.51 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைக்கிறார்.
தமிழிசை மூவருக்காக சீர்காழியில் ரூ.1.51 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைக்கிறார்.

தமிழிசை மூவர்களான சீர்காழி முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோருக்குth தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை சார்பில் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் ரூ.1.51 கோடியில், 250 பேர் அமரக்கூடிய மணிமண்டபம் கட்டும் பணி கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்கப்பட்டது.

குறித்தபடி கட்டடப் பணிகள் 2011, டிசம்பர் 24 அன்று முடிந்தாலும், உள் அலங்காரப் பணிகள் நடைபெற்று வந்ததால் மணிமண்டபம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இம்மணிமண்டபத்தைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையிலிருந்தவாறு காணொலி மூலம் புதன்கிழமை (பிப்ரவரி 20) காலை 10 மணி அளவில் திறந்துவைக்கவுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியரக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நன்றி :- தினமணி, 20-02-2013

முத்துத் தாண்டவரின் 9-வது தலைமுறையச் சேர்ந்தவர், மக்கள் நினைவில் வாழும், கலைமாமணி, இசைப்பேரறிஞர், முனைவர், திருப்பாம்புரம் சோ.சண்முக சுந்தரம்.

சீர்காழி மூவர் கீர்த்தனைகளை இருதொகுதிகளாகத் தொகுத்துள்ளார். 2000-ஆம் ஆண்டில் முதல் பதிப்பு வந்தது. 2008-ல் இரண்டாம் பதிப்பாகவும் வந்துள்ளது. தமிழிசை நுணுக்கம் இரண்டாம் பதிப்பாக 2007-ல் வந்துள்ளது.

உரோகிணி பதிப்பகம், 22-வெங்கடேசா நகர் முதல் தெரு, விருகம்பாக்கம் அஞ்சல், சென்னை-600 092. 

டாக்டர் சுதா சேஷய்யன் ”சீர்காழி மூவர்” என்ற நூலை எழுதியுள்ளார். LKM PUBLICATIONS, CHENNAI-17  இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.