Friday, December 14, 2012

டிவிட்டரில் எழுத ஆரம்பித்துள்ள முதல் போப்பாண்டவர் !



வாடிகன் சிட்டி: போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட்டும் டிவிட்டருக்குள் நுழைந்துள்ளார். 
 
தனது முதல் ட்வீட் செய்தியில், அனைவரையும் ஆசிர்வதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். டிவிட்டருக்குள் நுழையாதவர்களே யாரும் இல்லை என்றாகி விட்டது. 
 
இந்த நிலையில் தற்போது போப்பாண்டவரும் ட்விட்டருக்குள் வந்து விட்டார். தனது முதல் ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது... அன்பு நண்பர்களே, டிவிட்டர் மூலமாக உங்களைத் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
 
உங்களது பதில்களுக்கு எனது நன்றிகள். அனைவரையும் எனது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து ஆசிர்வதிக்கிறேன் என்று கூறியுள்ளார் 
 
போப்பாண்டவர். 85 வயதாகும் 16ம் பெனடிக்ட்தான் டிவிடடருக்குள் நுழைந்த முதல் போப்பாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/12/world-pope-benedict-blesses-in-his-first-tweet-166183.html

0 comments:

Post a Comment

Kindly post a comment.