Saturday, July 21, 2012

கேன்சர் (Cancer) – புற்றுநோய் வருவதற்கான காரணங்கள்


உலகில் தற்போது அனைவராலும் கொடிய நோய் என்று சொல்லப்படும் புற்றுநோய்க்கு (கேன்சர் ) இதுவரை முழுமையான மருந்து என்று ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் சித்தர் பெருமக்கள் புற்று நோய் ஒரு மனிதனுக்கு ஏன் வருகிறது என்ற காரணத்தை விரிவாக கொடுத்துள்ளனர். எல்லாம் வல்ல எம் குருநாதரின் பாதங்களை பணிந்து அதற்கான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
காரணங்கள் :
* எந்த பிழையும் செய்யாத ஒரு நல்ல மனிதரின் மனதை அடுத்தவரின் முன்னிலையில் வார்த்தையால் அவமானப்படுத்தும் நபருக்கும்,
* கொடிய சொற்களால் பெண்களின் மனதை பாதிப்படைய செய்யும் நபருக்கும்,
* இறை பணியில் தொண்டு செய்யும் நபரை தன் பணத் திமிரால் அவர் உள்ளம் நோகும் படி வார்த்தை பிரயோகிக்கும் நபருக்கும்,
* மக்கள் கூடும் பொது இடங்களில் ஒரு ஏழையின் மனதை வார்த்தையால் சுடும் நபருக்கும்,
* முற்பிறவியில் கட்டிய மனைவி அல்லது பெற்ற தாயை அல்லும் பகலும் வார்த்தையால் துன்பப்படுத்திய நபருக்கும்,
* வயதான பெற்றோர் அல்லது மாமனார் அல்லது மாமியார் மேல் கடும் சொல்லை அம்பாக கொண்டு அவர்களின் மனதை தாக்கிய நபருக்கும்,
மேலே கூறியதை செய்த நபர்களுக்கு வரும் நோயை தரணியில் உள்ளவர்கள் கொடிய நோய் என்றும் மருத்துவர்கள் இதற்கு மருந்தில்லை என்றும் கூறுவார்கள் என்று அந்த பாடல் இருக்கிறது, சற்று ஆழமாக பார்த்தால்
 “ ஒருவர் மனதை வாத்தையால் துன்பப்படுத்தும் நபர்களுக்கு கண்டிப்பாக இந்த நோய் வரும் என்பதை தெளிவாக எடுத்து கூறியுள்ளனர். உங்களுக்கு தெரிந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபரிடம் மேலே கூறிய காரணங்களில் ஏதாவது இருந்தால் ”ஆம் “  என்று பின்னோட்டத்தில் பதில் பகிர்ந்து கொள்ளுங்கள். செய்த தவறை உணர்ந்து வருபவர்களுக்கு இதற்கான மருந்து தெரிவிக்கலாம் என்றும், மற்றபடி தரணியில் உள்ளவர்களிடம் இதற்கான மருந்தை பகிராதே என்றும் இருக்கிறது. 
இதனால் முடிந்தவரை நாம் வார்த்தையால் , சொல்லும் சொல்லால் எக்காரணம் கொண்டும் யாரையும் துன்ப்படுத்தாமல் இருந்தாலே இந்தப் புற்றுநோயை வராமல் தடுக்கலாம்.

                        மேலும் கூடுதல் விபரங்களுக்கு அணுகுக!


http://naturalfoodworld.wordpress.com/

0 comments:

Post a Comment

Kindly post a comment.