Friday, January 6, 2012

நவீன ஆத்திசூடி-தி,ரோஸ்லின் சுரேஸ்

ஒள்வையார் எழுதிய ஆத்திசூடி தெரியும். மகாகவி பாரதி எழுதிய ஆத்திசூடி தெரியும். ஆனால் தி,ரோஸ்லின் சுரேஸ் எழுதிய ஆத்திசூடி எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

40ரூபாய்க்குள் 152 பாடல்களைப் படைத்தளித்துள்ளார்.

அன்பு கூர்ந்து வாழ்.

ஆசம் விரும்பு. ஆசம்-சிரிப்பு.

இரும்பையுள் விளக்குப்போல் இரேல்-குடத்துள் இட்ட விளக்குப்ப்பொல் இராதெ.

உப்புப் போல் பரவை அமுது போல் இரு

ஏற்றம் வேண்டின் இரக்கமாயிரு.

ஐம்புலன்ங்களை அடக்கப் பழகு.

காத்திருக்கப் பழகு.

கூடாக்கு தவிர். கூடாக்கு-புகையிலை

கவ்வைக்கும் விலக்கு. கவ்வை-பழிச்சொல் விலக்கு

சங்கல்யம் அகற்ரு. சங்கல்யம்- சந்தேகம்

சிற்றின்பத்தால் சீரழியாதே.

சீவியம் வேண்டின் பெற்றோரைப் பேணு, சீவியம்- ஆயுள்

சூரகம் முன் முத்தைப் போடேல். சூரகம்-பன்றி

சொந்தம் பாராட்டு.

சவுமாரம் நிலையா-சவுமாரம்-இலமை-யாக்கை

ஞாய் சொல் கெல். ஞாய்-தாய்-அன்னை-மாதா

தற்பெருமை கொள்ளேல்

தீமையொடு எதிர்த்து நில்லாதெ.

தேசிகன் சொல் கேள். தேசிகன்-ஆசிரியர்

நிணம் உண்ணேல்/ நிணம்-கொழுப்பு

நீர்க்கழிவு அறு. நீரிழிவு நீக்கு.

நூல்பல கல்

நோக்கம் அறிந்து வாழ்

பார் போற்று வாழ்.

தீமைக்கும் நன்மை செய்.

நவீன ஆத்திசூடி ந்ல்லோர் போற்றும் பொன்னேடு. நல்வாழ்வுக் ன்கரையைக் காட்டும் கலங்கரை விளக்கம்.

உணவு என்றால் அனைத்தும் அடங்க்குவது போல். பதவுரை, கருத்துரை அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற நூல்.

அகர வரிசையில் எழுதப் பெற்ற நூல்.

அறிவுப் பதிப்பகம், இராயப்பேட்டை-600 004 2009 நவம்பரில் 40 ரூபாய் விலையில் வெளியிட்டுள்ளது. 28482441, 28482973.

152 பாடல்களில் சில உதாரணங்களை மட்டும் எடுத்துக் காட்டியுள்ளேன். மறக்கப்பட்ட பழைய சொற்கள் பலவற்றையும் பயன் படுத்தியுள்ளது இதன் சிறப்பு. பயபடுத்திக் கொள்வது நமது பொறுப்பு.

பக்கத்திற்கு இரண்டு படங்களுடன் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் அழகிய வடிவமைப்பில் அச்சிடப்பட்டுள்ள மாண்பையும் குறிப்பிட்டே தீரவேண்டும்..

0 comments:

Post a Comment

Kindly post a comment.