Sunday, October 2, 2011

டெல்லியில் ஐந்து ஆண்டு ஜெயில்+ஒரு ல்ட்சம் அபராதம் பிளாஸ்டிக் பயன்படுத்தினால்:-

சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.1986-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி, இதற்கான வரைவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை, பயன்படுத்துவது, வைத்திருத்தல் உள்ளிட்டவை முற்றிலுமாக தடை செய்யப்பட உள்ளது.

இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 5 ஆண்டு வரையிலான ஜெயில் தண்டனையோ அல்லது ரூ.1 லட்சம் வரையிலான அபராதமோ அல்லது இவை இரண்டுமோ சேர்த்து விதிக்கப்படும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.