Wednesday, September 14, 2011

ஊனம் மனதில் அல்ல! சாதனை மனிதர்!

http://puthiyaulakam.com/?p=5548
 
ஊனம் என்பது உடல் உறுப்புகளில் அல்ல மனதில் மட்டும்தான் என எமக்கு அவ்வப்போது உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள் ஊனமாக வாழ்த்து சாதித்துக்காட்டும் மனிதர்கள். 
 
இந்த வரிசையில் தெற்கு சுலோவாசியின் காட்டுப்பகுதியில் பொலேவாலி மந்தர்( Pழடநறயடi ஆயனெயச ) எனும் நபர் தனது இரண்டு கண்களும் பார்வையற்றவராக இருந்தும் 20 வருடங்கள் காட்டுக்குள் பிழைப்பு நடத்தியிருக்கிறார். காட்டில் அமைக்கப்பட்ட ஒரு ஓலைக்குடிசையில் வசிக்கும் இவர் தென்னை மற்றும் பனைமரங்களில் ஏறி அதன் மட்டைகளை (இலைகளை) பறித்து அதன் மூலம் பல பொருட்களை செய்து அருகில் இருக்கும் குடியிருப்பாளர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.
 
இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு இவர் எந்த குறையும் இன்றி பிழைப்பு நடாத்தி வருகின்றார். இருந்தும் இவரது உடல் நிலை தற்போது மோசமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.