
"தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்க வேண்டும்.என்ற நரசிம்மன் குழு பரிந்துரையை மட்டும் ஏற்றுக் கொண்டால் என்ன தவறு ஏற்பட்டுவிடும்" என்று புரியவில்லை.
வங்கிகளின் எண்ணிக்கையயும், ஊழியர்களையும் குறைக்க வேண்டும் என்பதை மட்டும் ஏற்றிடத் தேவையில்லை.
எல்லாமே அரசு வங்கிகள்தான் என்ற நிலையில் ஒரே பகுதியில் பல்வேறு வங்கிகளின் கிளைகள் எதற்காக ? என்பதே சாமான்யக் குடிமகனின் கேள்வி.
எந்த ஒரு அரசு வங்கியில் போடப்படும் பணமும் பாரத அரசுக்குச் சொந்தமானது என்றுதானே கருதப் பட வேண்டும்.
அப்படி இருக்கும் பொழுது வங்கி இல்லாத பகுதிகளில் கிளைகளை ஆரம்பிப்பதுதானே சரியாக இருக்க முடியும்.
ஒரேபகுதியில் பல்வேறு வங்கிகளின் கிளைகள் செயல்படுவதால் எல்லா இடங்களிலும் எப்படியோ கணக்கைத் துவக்கிக் கடனை வாங்கி விட்டுத் திருப்பிச் செலுத்த முடியாமல் அல்லலுறும் நபர்களின் கதைகள் ஏராளம் உள்ளனவே!
அரசு வங்கிகள் இல்லாத இடங்களில் மட்டுமே புதிய கிளைகள் துவக்கப் பட வேண்டும். இருக்கும் கிளைகளில் இட வசதியையும், ஊழியர்களின் எண்ணிக்கையையும் தேவைக்கேற்ப அதிகரித்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையையை உருவாக்கினால் நிர்வாகச் செலவுகளைக் கட்டுப்படுத்திட இயலுமல்லவா?
இவ்வாறு இணப்பதன் மூலம் ஊழியர்களின் SENIORITY, PROMOTION பாதிக்கப்படும் என்ற ஒரே காரணத்தினால்தானே வங்கிகள் இணைப்பதை எதிர்க்கின்றீர்கள்? சில இழப்புக்களை நாட்டின் நன்மைக்காக ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் நண்பர்களே!
இணைக்கப் பட்ட வங்கிகள் மூலமாகவும் 30% சதவிகித வைப்புத் தொகையினை வைத்துக் கொண்டு, 70% சதவிகித கடன் மட்டும் வழங்குவதை யார் வந்து தடுக்கப் போகின்றார்கள்? அப்படித் தடுத்தால் அதற்காகப் போராடுங்கள்; நாங்களும் உங்களுக்கு ஆதரவாகக் கூட வருகின்றோம்.
51% பங்குகளை மட்டும் அரசு வைத்துக் கொண்டு, 49% பங்குகளத் தனியாருக்கு விற்கப்படும் பொழுது வங்கி ஊழியர்களாகிய நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஏனெனில் உடனடியாக நேரடிப் பாதிப்பு எதுவுமில்லை என்பதால் மௌனித்து விட்ட்டீர்கள் அப்படித்தானே, நண்பர்களே?
உங்களது வசதியான வாழ்க்கையில் கொஞ்சம் பாதிப்பு ஏற்படக் கூடும். அதாவது, லாபத்தில் நட்டம் என்பது போன்று! அதனை ஏற்றுக் கொண்டுதான் தீரவேண்டும் நண்பர்களே.
உங்களைவிடக் குறைவான சம்பளம் பெற்று வந்த அரசு ஊழியர்கள், சில துறைகள் இணைக்கப் பட்டபோது இழந்தவைகள் ஏராளம். SENIORITY, PROMOTION பாதிப்புக்கள் ஏற்படத்தான் செய்தன.
அவர்களுக்கு ஒருசட்டம் உங்களுக்கு ஒரு சட்டமா? இது எந்த ஊர் நியாயம்?
தனியார்களுக்கு பங்குகள் விற்கப்பட்ட போது அவற்றை ஊழியர்களாகிய எங்களுக்குக் கொடுங்கள் என்று நீங்கள் ஏன் கேட்கவில்லை?
சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளையும், வேலயில்லாத் திண்டாட்டத்தையும் வசதியான சமூகப் பாதுகாப்புடைய வங்கி ஊழியர்களாகிய நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நிர்வாகச் செலவுகளைக் குறைத்து மேலும் லாபம் ஈட்ட வழிவகைகளக் காண்பதில் வங்கி ஊழியர்களுக்கும் பொறுப்பு உண்டு.
இந்த வகையில் யோசித்துப் பார்க்கும் வேளையில், வங்கிகள் இணைக்கப் படுவதில் எந்தவிதமான தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. அதே நேரத்தில் ஊழியர் குறைப்பு இல்லாமல் பதுகாத்துக் கொள்ளும் வலிமை வங்கி ஊழியர்களுக்கு உண்டு.
நிர்வாகச் சீர்கேடுகளைக் களைந்து வங்கிகள் சீரமைக்கப் படவேண்டியது அவசிய அவசரத் தேவையுமாகும். இணைப்பதைத் தடுப்பதன் மூலம் மட்டும்தான் வங்கிகளைப் பாதுகாக்க முடியும் என்பது சரியான வாதமல்ல. கடைந்தெடுத்த சுயநலமேயன்றி வேரொன்றுமில்லை.
வராக் கடன்கள், தள்ளுபடி செயப்பட்ட கடன்கள், வசூலிக்க வழியிருந்தும் வசூலிக்க முடியாமல் இருக்கும் கடன்கள் இவற்றை எல்லாம் பட்டியலிட்டுக் காட்டுவீர்களா ?
பொது மக்கள் பணத்தில் நீங்கள் வாங்கும் கடன்களுக்குச் செலுத்தும் வட்டி விகிதாச்சாரங்களை எல்லாம் அலசிப் பார்ப்போமா?
இந்திய அரசாங்கம் சில மாற்றங்களக் கொண்டு வந்து ஒவ்வொரு அஞ்சல் நிலையத்தையும் வங்கித் தொழிலில் ஈடுபடச் செய்து விடுமானால் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகளின் முக்கியத்துவம் குறைந்து போய்விடும். ஆனால் அப்படியெல்லாம் இந்தியாவில் எளிதில் மாற்றங்கள் வந்து விடுமா என்ன?
0 comments:
Post a Comment
Kindly post a comment.