Tuesday, November 1, 2011

பெட்ரோல் எப்பொழுது வாங்க வேண்டும்?

வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டுமா? பின்வரும் தகவல்களை நினைவிற் கொள்க. எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன.

அதனால், நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதுதான் எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் அளவுடன் இருக்காது.

எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பினால் வாங்கும் பெட்ரோலின் அளவு சரியாக இருக்கும்.

பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல நமது வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பக்கூடாது. நிரப்பினால் நமக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்பவேண்டும். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும்.

நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும்.

வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும். ( தொட்டி-டேங்க்)
<span title=

அதேபோல, நாம் பெட்ரோல் நிரப்பப் போகும் போது , அந்த பங்கில் லாரியில் இருந்து மொத்தமாக விற்பனக்கு பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது நமது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பக்கூடாது. கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினைப் பாதிக்கும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.