Showing posts with label அரசியல்-பகிரங்கக் கடிதங்கள்-. Show all posts
Showing posts with label அரசியல்-பகிரங்கக் கடிதங்கள்-. Show all posts

Sunday, November 9, 2014

தென்னன் மெய்ம்மன்

ஆசிரியர் : வெளிக்கரு

thennanmeimman@gmail.com






தேவை புதிய அரசியல் விழிப்புணர்வு - 08-11-2014 தினமணி குருமூர்த்தி கட்டுரைக்குப் பதில் !

தென்னன் மெய்ம்மன்

ஆசிரியர் : வெளிக்கரு

thennanmeimman@gmail.com






Friday, December 18, 2009




* Communist Party of India
* Communist Party of India (Marxist)
* Communist Party of India (Marxist-Leninist)
* Communist Party of India (Marxist-Leninist) New Democracy
* Communist Party of India (Marxist-Leninist) Red Flag

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு வரையறுத்த நெறிமுறைகளின்படி, தொழிற் சங்கம் அமைக்கும் உரிமையை 140 நாடுகள் ஏற்கனவே அங்கீகரித்துள்ளன.

கூட்டுபேர பேச்சு நடத்துவதற்கான உரிமைகளை150 நாடுகள்ஏற்கனவே அங்கீகரித்துள்ளன.

"இந்தியாவில் இந்த இரு உரிமைகளும் இருப்பதாகக் கூறினாலும் இதுவரை சட்டமாக்கப் படவில்லை. இதனால் 91% தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைகளால் பயன் பெற இயலவில்லை."

இன்றளவும் சட்டமாக்கப் படவில்லை என்பது உண்மையானால் வெட்கமும் வேதனயும் படுவதைத் தவிர வேறு வழி இல்லை.இத்தனை ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் தொழர்களே?

பன்னாட்டு நிறுவனங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிற்சங்கம் அமைக்க இயலவில்லை.வரையறுக்கப் பட்ட வேலை நேரம், விடுமுறை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளும் வழங்கப் படவில்லை.

பெண்கள் அவர்கள் வசிக்கும் இடங்களிலிருந்து வேலை செய்யும் இடங்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று திரும்பி அழைத்து வருவதால் தொழிற்சங்க உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பெற முடியாத நிலை உள்ளது. (???)

ஏ.ஐ.டி.யூ,சி.; சி,ஐ.டி.யூ.சி.;எச்.எம்.எஸ்..பாரதீய மஸ்தூர் சங்கம்,தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் ஆகியோர் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழு அரசாங்கத்திடம் வைத்துள்ள கோரிக்கை இதுதான்.

"தொழிலாளர் உரிமைகளை சட்டபூர்வமாக்க அரசு முன்வர வேண்டும்."

உங்களை நம்பியா இத்தனை நாட்கள் தொழிலாளர்கள் ???

source: தினமணி,18, டிசம்பர்,2009.

அ.ஆ. எழுதச் சொல்லும் சிகப்புக் கட்சித் தோழர்களை நினைத்தால்?




* Communist Party of India
* Communist Party of India (Marxist)
* Communist Party of India (Marxist-Leninist)
* Communist Party of India (Marxist-Leninist) New Democracy
* Communist Party of India (Marxist-Leninist) Red Flag

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு வரையறுத்த நெறிமுறைகளின்படி, தொழிற் சங்கம் அமைக்கும் உரிமையை 140 நாடுகள் ஏற்கனவே அங்கீகரித்துள்ளன.

கூட்டுபேர பேச்சு நடத்துவதற்கான உரிமைகளை150 நாடுகள்ஏற்கனவே அங்கீகரித்துள்ளன.

"இந்தியாவில் இந்த இரு உரிமைகளும் இருப்பதாகக் கூறினாலும் இதுவரை சட்டமாக்கப் படவில்லை. இதனால் 91% தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைகளால் பயன் பெற இயலவில்லை."

இன்றளவும் சட்டமாக்கப் படவில்லை என்பது உண்மையானால் வெட்கமும் வேதனயும் படுவதைத் தவிர வேறு வழி இல்லை.இத்தனை ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் தொழர்களே?

பன்னாட்டு நிறுவனங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிற்சங்கம் அமைக்க இயலவில்லை.வரையறுக்கப் பட்ட வேலை நேரம், விடுமுறை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளும் வழங்கப் படவில்லை.

பெண்கள் அவர்கள் வசிக்கும் இடங்களிலிருந்து வேலை செய்யும் இடங்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று திரும்பி அழைத்து வருவதால் தொழிற்சங்க உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பெற முடியாத நிலை உள்ளது. (???)

ஏ.ஐ.டி.யூ,சி.; சி,ஐ.டி.யூ.சி.;எச்.எம்.எஸ்..பாரதீய மஸ்தூர் சங்கம்,தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் ஆகியோர் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழு அரசாங்கத்திடம் வைத்துள்ள கோரிக்கை இதுதான்.

"தொழிலாளர் உரிமைகளை சட்டபூர்வமாக்க அரசு முன்வர வேண்டும்."

உங்களை நம்பியா இத்தனை நாட்கள் தொழிலாளர்கள் ???

source: தினமணி,18, டிசம்பர்,2009.

Wednesday, December 16, 2009



எம்.ஜி,ஆர். தனிக் கட்சி ஆரம்பித்தபோது ஏதேனும் சந்தேகம் வந்தால் இவரைத்தான் அடிக்கடி அழைப்பார். தொலை பேசிப் பேச்சுப் போதாதென்றால் காரை அனுப்பி அழைத்து வரச் செய்வார். அல்லது இவரே அவர் இருக்குமிடம் நோக்கி நேரிலேயே சென்று விடுவார்.

எம்.ஜி.ஆர் கொடி நடுவே அண்ணா படத்தைப் போடச் சொன்னதில் இவருக்கும் பெரும் பங்குண்டு.

அவர் எடுக்கும் முடிவுகள் தமிழக அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தியதை வரலாறு தெரிந்தவர்கள் மற்க்க முடியாது.

மூதறிஞர் ராஜாஜி மந்திரிசபை அமைத்தபோது , தனது அமைச்சரவையில் பங்கேற்க அழைத்தபோது, மறுத்துவிட்ட பெரு்ந்தகையாளர்.

பெரும்பாலும் டெல்லி ராஜ்யசபை பாராளுமன்ற உறுப்பினராகவே காலத்தைச் செலவிட்ட தொழிற்சங்கவாதி!

யார் அவர் என்று கேட்கத் தோன்றுகின்றதா?

அவர் தான் முதுபெரும் தோழர் எம்.கல்யாணசுந்தரம் ஆவார்! அவர் சாகும் வரை சொல்லிக் கொண்டிருந்தவற்றுள், "தேசியமமாக்கப் பட்ட வங்கிகள் சீரமைக்கப் படவேண்டும்" என்ற கருத்தும் ஒன்றாகும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டாக ஓர் வியாபாரத்தில் ஈடு பட்டால் நிர்வாககச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள எந்த அளவிற்கு முயற்சி செய்வார்கள் என்பதைச் சிறிது கற்பனை பண்ணிப் பார்த்தால் போதும்! இந்த பொதுத் துறை வங்கிகள் நிர்வாகச் செலவுகளில் காட்டிடும் ஊதாரித்தனம்!

ஒரே தெருவில் பல்வேறு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் எதற்காக? மக்களின் பணம் ஏதேனும் ஒரு பொதுத் துறை வங்கியில் இருந்தால் போதாதா?

சொந்தம்/ வாடகைக் கட்டிடம், மேஜை,நாற்காலி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட அவசியமான சாமான்கள், மின்சாரம் முதலான செலவுகள்- ஆக மொத்த நிர்வாகச் செலவுகள் வீண்தானே?

அவர்களுக்குள் "AREA" பிரித்துக் கொண்டு வங்கிகள் இல்லாத புதிய இடங்களில் கிளைகளைத் துவக்கலாமே ஏன் செய்ய மறுக்கிறார்கள்?

ஸ்டேட் வங்கி இந்தூரை, பாரத ஸ்டேட் வங்கியுடன் இணத்துவிட்டால் என்ன குடியா முழுகிப் போய் விடும்? இன்றைய வேலை நிறுத்ததிற்கான தலையான காரணம் இதுதான்!

தொலைதொடர்புத் துறையில் பல முறை பல பிரிவுகள் இணைக்கப் பட்ட போது அந்த ஊழியர்களின் seniority பாதிப்புக்குள்ளாகத் தானே செய்தன? இழப்புக்களை அவர்கள் ஏறுக் கொள்ளத்தானே செய்தார்கள்.?

வங்கிகளுக்கு மட்டும் என்ன விதி விலக்கு? அனைத்து வங்கிகளுமே ஒருங்கிணக்கப் பட வேண்டும். வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என 4 zonal-களாகப் பிரித்துக் கொண்டால் போதுமானது. அவசியமானால் ஒன்றிரண்டைக் கூட்டிக் கொள்ளலாம், தேவைக்கேற்ப!

ஒட்டு மொத்தமான சீனியாரிட்டி லிஸ்ட் தயாரிக்கப் படல் வேண்டும். அப்பாயின்மெண்ட் நாட்களின்படி இணக்கப் படும்பொழுது பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்? அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.


மொத்தத்தில் வங்கி ஊழியர்கள் பேச்சு வார்த்தை மூலமாகவே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும். போராட்டம் தேவையற்றது.

வங்கிகள் இணைப்பு காலத்தின் கட்டாயம். எல்லா வங்கிகளுமே இணைக்கப் படுவதுதான் நாட்டிற்கு நல்லது.

கிராமங்கள் தோறும் படர்ந்துள்ள போஸ்ட் ஆபீஸ்கள் சீரமைக்கப்பட்டு அவற்றில் வங்கிகளின் சேவைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டால்,

தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளின் முக்கியத்துவம் இல்லாமற் போய்வி்டும். வேலை வாய்ப்பும் பெருகும். அப்படிப்பட்ட காலம் வராமலா போய்விடும்?

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஓர் கேள்வி?



எம்.ஜி,ஆர். தனிக் கட்சி ஆரம்பித்தபோது ஏதேனும் சந்தேகம் வந்தால் இவரைத்தான் அடிக்கடி அழைப்பார். தொலை பேசிப் பேச்சுப் போதாதென்றால் காரை அனுப்பி அழைத்து வரச் செய்வார். அல்லது இவரே அவர் இருக்குமிடம் நோக்கி நேரிலேயே சென்று விடுவார்.

எம்.ஜி.ஆர் கொடி நடுவே அண்ணா படத்தைப் போடச் சொன்னதில் இவருக்கும் பெரும் பங்குண்டு.

அவர் எடுக்கும் முடிவுகள் தமிழக அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தியதை வரலாறு தெரிந்தவர்கள் மற்க்க முடியாது.

மூதறிஞர் ராஜாஜி மந்திரிசபை அமைத்தபோது , தனது அமைச்சரவையில் பங்கேற்க அழைத்தபோது, மறுத்துவிட்ட பெரு்ந்தகையாளர்.

பெரும்பாலும் டெல்லி ராஜ்யசபை பாராளுமன்ற உறுப்பினராகவே காலத்தைச் செலவிட்ட தொழிற்சங்கவாதி!

யார் அவர் என்று கேட்கத் தோன்றுகின்றதா?

அவர் தான் முதுபெரும் தோழர் எம்.கல்யாணசுந்தரம் ஆவார்! அவர் சாகும் வரை சொல்லிக் கொண்டிருந்தவற்றுள், "தேசியமமாக்கப் பட்ட வங்கிகள் சீரமைக்கப் படவேண்டும்" என்ற கருத்தும் ஒன்றாகும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டாக ஓர் வியாபாரத்தில் ஈடு பட்டால் நிர்வாககச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள எந்த அளவிற்கு முயற்சி செய்வார்கள் என்பதைச் சிறிது கற்பனை பண்ணிப் பார்த்தால் போதும்! இந்த பொதுத் துறை வங்கிகள் நிர்வாகச் செலவுகளில் காட்டிடும் ஊதாரித்தனம்!

ஒரே தெருவில் பல்வேறு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் எதற்காக? மக்களின் பணம் ஏதேனும் ஒரு பொதுத் துறை வங்கியில் இருந்தால் போதாதா?

சொந்தம்/ வாடகைக் கட்டிடம், மேஜை,நாற்காலி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட அவசியமான சாமான்கள், மின்சாரம் முதலான செலவுகள்- ஆக மொத்த நிர்வாகச் செலவுகள் வீண்தானே?

அவர்களுக்குள் "AREA" பிரித்துக் கொண்டு வங்கிகள் இல்லாத புதிய இடங்களில் கிளைகளைத் துவக்கலாமே ஏன் செய்ய மறுக்கிறார்கள்?

ஸ்டேட் வங்கி இந்தூரை, பாரத ஸ்டேட் வங்கியுடன் இணத்துவிட்டால் என்ன குடியா முழுகிப் போய் விடும்? இன்றைய வேலை நிறுத்ததிற்கான தலையான காரணம் இதுதான்!

தொலைதொடர்புத் துறையில் பல முறை பல பிரிவுகள் இணைக்கப் பட்ட போது அந்த ஊழியர்களின் seniority பாதிப்புக்குள்ளாகத் தானே செய்தன? இழப்புக்களை அவர்கள் ஏறுக் கொள்ளத்தானே செய்தார்கள்.?

வங்கிகளுக்கு மட்டும் என்ன விதி விலக்கு? அனைத்து வங்கிகளுமே ஒருங்கிணக்கப் பட வேண்டும். வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என 4 zonal-களாகப் பிரித்துக் கொண்டால் போதுமானது. அவசியமானால் ஒன்றிரண்டைக் கூட்டிக் கொள்ளலாம், தேவைக்கேற்ப!

ஒட்டு மொத்தமான சீனியாரிட்டி லிஸ்ட் தயாரிக்கப் படல் வேண்டும். அப்பாயின்மெண்ட் நாட்களின்படி இணக்கப் படும்பொழுது பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்? அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.


மொத்தத்தில் வங்கி ஊழியர்கள் பேச்சு வார்த்தை மூலமாகவே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும். போராட்டம் தேவையற்றது.

வங்கிகள் இணைப்பு காலத்தின் கட்டாயம். எல்லா வங்கிகளுமே இணைக்கப் படுவதுதான் நாட்டிற்கு நல்லது.

கிராமங்கள் தோறும் படர்ந்துள்ள போஸ்ட் ஆபீஸ்கள் சீரமைக்கப்பட்டு அவற்றில் வங்கிகளின் சேவைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டால்,

தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளின் முக்கியத்துவம் இல்லாமற் போய்வி்டும். வேலை வாய்ப்பும் பெருகும். அப்படிப்பட்ட காலம் வராமலா போய்விடும்?

Tuesday, December 8, 2009


பேரன்பு கொண்ட பெருந்தகையீர்!

நீடுழீ வாழ நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள். சமுதாய மாற்றத்திற்காக வாழ்வியல் மாதமிருமுறையாக வெளிவரும் "உண்மை" டிசம்பர் 1-15 தங்களின் பிறந்த நாள் சிறப்பிதழாகக் கொண்டு வரப்பட்டுள்ளது குறித்துப் பெரு மகிழ்ச்சி.

தாங்களே அச்சிடுபவராகவும், ஆசிரியராகவும் இருந்து கொண்டு சிறப்பிதழ் வெளியிட்டதைத் தவறாகக் கொள்ளமாட்டேன். பெரியார் சுய மரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் வெளிவரும் இதழை எப்படி வேண்டுமானாலும் வெளியிடுவது அதன் செயலரான தங்களது உரிமை!

சிறப்பிதழில் அட்டையுடன் சேர்த்து 70 பக்கங்கள் உள்ளன. அதில், 24 பக்கங்கள் விளம்பரங்களே. பெரியார் திரை குறும்படப் போட்டி அறிவிப்புப் பக்கத்தை இதில் சேர்க்கவில்லை.

வழக்கமான ரூபாய் 10-க்கே கூடக் கொடுத்திருக்கலாம். ரூபாய் 15 -க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இது நியாயமில்லை .

தங்களது வழக்கமான விலையான ரூபாய் 10-த்தைக் கூட, ரூபாய் 5-ஆகக் குறைக்க வேண்டும் என்பதே இந்தக் கடிதம் மூலம் விடு்க்கும் பகிரங்கமான வேண்டுகோள்.

பகி்ரங்கம் என்ற வார்த்தை பயன் படுத்தப்பட்டிருப்பதன் காரணம், இக்கடிதம் வலைப்பூவில் பதிவுசெயயப்பட்டிருகிறது ஓர் ஆவணமாக!ஆதங்கம் பிரிவில்!

தங்கள் பார்வைக்கு வரும்பொழுது உலகாளவிய நிலையில் பலரால் படிக்கப் பட்டிருக்கும்.பிரச்சார நிறுவனம், வியாபார நோக்கோடு செயல்படுவதில் நியாயமில்லை.

இந்தியக் கம்யூனி்ஸ்ட் கட்சி நிர்வாகத்தில், நியூசெஞ்சுரி பிரிண்டர்ஸ் நிறுவனத்தில் சம்பள உயர்வுப் பிரச்சினை எழுந்தபோது, பாவை அச்சகத்தை உருவாக்கிக் கொண்ட கம்யூனிஸ்டுகளைப் போல் செயல்படுபவரல்ல என்ற நம்பிக்கையுடன் இந்தக் கடிதம் எழுதப் படுகி்ன்றது.

மின்னஞ்சல் மூலம் சாமன்யன் ஒருவரால் அனுப்பப்படும் கடிதத்திற்குரிய பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன். பதிலும் பதிவு செய்யப்படும்.
நன்றி.வணக்கம்,அன்பு, சேது.

http://rssairam.blogspot.com/

77-ஆம் ஆண்டுப் பிறந்த நாள் காணும் பெரியவர் வீரமணிக்கு ஓர் பகிரங்க வேண்டுகோள் கடிதம்!


பேரன்பு கொண்ட பெருந்தகையீர்!

நீடுழீ வாழ நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள். சமுதாய மாற்றத்திற்காக வாழ்வியல் மாதமிருமுறையாக வெளிவரும் "உண்மை" டிசம்பர் 1-15 தங்களின் பிறந்த நாள் சிறப்பிதழாகக் கொண்டு வரப்பட்டுள்ளது குறித்துப் பெரு மகிழ்ச்சி.

தாங்களே அச்சிடுபவராகவும், ஆசிரியராகவும் இருந்து கொண்டு சிறப்பிதழ் வெளியிட்டதைத் தவறாகக் கொள்ளமாட்டேன். பெரியார் சுய மரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் வெளிவரும் இதழை எப்படி வேண்டுமானாலும் வெளியிடுவது அதன் செயலரான தங்களது உரிமை!

சிறப்பிதழில் அட்டையுடன் சேர்த்து 70 பக்கங்கள் உள்ளன. அதில், 24 பக்கங்கள் விளம்பரங்களே. பெரியார் திரை குறும்படப் போட்டி அறிவிப்புப் பக்கத்தை இதில் சேர்க்கவில்லை.

வழக்கமான ரூபாய் 10-க்கே கூடக் கொடுத்திருக்கலாம். ரூபாய் 15 -க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இது நியாயமில்லை .

தங்களது வழக்கமான விலையான ரூபாய் 10-த்தைக் கூட, ரூபாய் 5-ஆகக் குறைக்க வேண்டும் என்பதே இந்தக் கடிதம் மூலம் விடு்க்கும் பகிரங்கமான வேண்டுகோள்.

பகி்ரங்கம் என்ற வார்த்தை பயன் படுத்தப்பட்டிருப்பதன் காரணம், இக்கடிதம் வலைப்பூவில் பதிவுசெயயப்பட்டிருகிறது ஓர் ஆவணமாக!ஆதங்கம் பிரிவில்!

தங்கள் பார்வைக்கு வரும்பொழுது உலகாளவிய நிலையில் பலரால் படிக்கப் பட்டிருக்கும்.பிரச்சார நிறுவனம், வியாபார நோக்கோடு செயல்படுவதில் நியாயமில்லை.

இந்தியக் கம்யூனி்ஸ்ட் கட்சி நிர்வாகத்தில், நியூசெஞ்சுரி பிரிண்டர்ஸ் நிறுவனத்தில் சம்பள உயர்வுப் பிரச்சினை எழுந்தபோது, பாவை அச்சகத்தை உருவாக்கிக் கொண்ட கம்யூனிஸ்டுகளைப் போல் செயல்படுபவரல்ல என்ற நம்பிக்கையுடன் இந்தக் கடிதம் எழுதப் படுகி்ன்றது.

மின்னஞ்சல் மூலம் சாமன்யன் ஒருவரால் அனுப்பப்படும் கடிதத்திற்குரிய பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன். பதிலும் பதிவு செய்யப்படும்.
நன்றி.வணக்கம்,அன்பு, சேது.

http://rssairam.blogspot.com/