வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் 2015
வாசக சாலை என்னும் இலக்கிய அமைப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து, திருவான்மியூர் பனுவல் புத்தக அரங்கில் மாதமொருமுறை புத்தக விமர்சனக் கூட்டங்கள் , இலக்கிய அரங்கு மற்றும் தமிழின் முன்னோடிப் படைப்பாளிகளை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்திவருகிறது. இந்த அமைப்பின் முதலாம் ஆண்டு விழா எதிர்வரும் டிசம்பர் மாதம் 19-ம் தேதி நடக்கவுள்ளது. அதை ஒட்டி இந்த அமைப்பின் சார்பாக, சிறந்த நாவல் மற்றும் சிறந்த சிறுகதைத் தொகுப்பு ஆகிய இரு பிரிவுகளின் கீழ் தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்படவுள்ளன. நவம்பர்-2014 முதல் அக்டோபர்-2015 வரையான காலகட்டத்தில் வெளியான படைப்புகளில், மேற்கூறிய இரு பிரிவுகளின் கீழ் உங்கள் பரிந்துரைகளை வரும் 21-ம் தேதிக்குள் vasagasalai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு 9942633833 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.
நன்றி ;- தி இந்து
0 comments:
Post a Comment
Kindly post a comment.